பேரா, ஊத்தான் மெலிந்தாங், சுங்ஙை சுமுன், கம்போங் டுங்கை டுலாங்கில் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் கடை வரிசை ஒன்றில் மூன்று கடைகள் அழிந்தன.
இச்சம்பவத்தில் கைப்பேசி கடை உரிமையாளர் என்று நம்பப்படும் 38 வயது நபர், தீக்காயங்களுக்கு ஆளாகினார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தான் மெலிந்தாங் மற்றும் தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் தீ, மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் ஒரு முடித்திருத்தும் நிலையம், தையல் கடை மற்றும் கைப்பேசிக்கடை தீயில் அழிந்ததாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


