பேரா, ஊத்தான் மெலிந்தாங், சுங்ஙை சுமுன், கம்போங் டுங்கை டுலாங்கில் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் கடை வரிசை ஒன்றில் மூன்று கடைகள் அழிந்தன.
இச்சம்பவத்தில் கைப்பேசி கடை உரிமையாளர் என்று நம்பப்படும் 38 வயது நபர், தீக்காயங்களுக்கு ஆளாகினார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தான் மெலிந்தாங் மற்றும் தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் தீ, மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் ஒரு முடித்திருத்தும் நிலையம், தையல் கடை மற்றும் கைப்பேசிக்கடை தீயில் அழிந்ததாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


