கோலாலம்பூர், செப்டம்பர்.19-
கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
கம்போங் சுங்கை பாருவின் மறுவடிவமைப்பைச் சுற்றி பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் குடியிருப்பாளர்களுக்கு அபாயங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமை, நிர்வாகக் குறைபாடு, வியூகத் திட்டம் இல்லாதது முக்கிய காரணங்களாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
நகர்ப்புறத் திட்டமிடல், நில பயன்பாடு தொடர்பான பிரச்சினை ஒரு புதிய விஷயம் அல்ல. ஆனால் தற்போதைய அணுகுமுறையின் பலவீனங்கள் மக்களைப் பலிகடா ஆக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.








