Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள்  கண்டறியப்படவில்லை
தற்போதைய செய்திகள்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

Share:

கூச்சிங், ஜனவரி.23-

கடந்த வாரம், ஶ்ரீ அமானில் உள்ள வீடு ஒன்றில், தலைமையாசிரியர் ஒருவரும், தாதியரான அவரின் மனைவியும் கொலையுண்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பான விசாரணையை, சரவாக் மாநில போலீசார் பெருமளவில் நிறைவு செய்துள்ளனர்.

கொலை நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயதத்தில், வெளிநபர்களின் மரபணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட இருவரின் மரபணுக்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் அம்மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் டத்தோ முஹமட் ஸைனால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் புகுந்ததற்கான தடயங்களோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களோ கண்டறியப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

லுபோக் அந்து மாவட்டத்தில் உள்ள SK Sbangki தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 45 வயது Andy Roy Junran-யும், ஶ்ரீ அமான் மருத்துவமனையில் தாதியராகப் பணியாற்றி வந்த அவரது 44 வயது மனைவி Angelin Kibin-னும், வீட்டின் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது