ஜோகூர், குளுவாங், ஜாலான் பாடாங் தேம்பாக், தாவுலா ஹீல் என்ற இடத்தில் ஐந்து டன் லோரியும், ஒரு டன் லோாரியும் மோதிக் கொண்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர். இதில் லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய இருவரில் லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
கடும் காயங்களுக்கு ஆளான உதவி ஓட்டுநர், எண்மர் அடங்கிய தீயணைப்பு, மீட்புப்படையினரால் மீட்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி முஹமாட் ரிட்சுவான் முஹமாட் சாயிட் தெரிவித்தார்.
காயமுற்றவர்கள் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








