May 26, 2026
Thisaigal NewsYouTube
பயணப்பெட்டிக்குள் சடலம், சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
தற்போதைய செய்திகள்

பயணப்பெட்டிக்குள் சடலம், சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

Share:

கோலாலம்பூர், டிச.10-


வீடமைப்புப்பகுதி ஒன்றில் கால் வாய் அருகில் சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்ட பயணப்பெட்டிகுள் சடலம் கிடந்தது அப்பகுதியில் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது..

காஜாங், செராஸ், தாமன் செராஸ் பெர்டானாவில் இன்று காலையில் ஒரு சூட்கேஸ் வடிவில் காணப்பட்ட பயணப்பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட பொது மக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பெட்டிக்குள் புழுக்கள் மொய்ப்பதை கண்ட பொதுமக்கள், அது மனிதரின் உடல் அவயமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். அந்தப் பயணப்பெட்டிக்குள் மனித உடல் அவயங்கள் இருப்பது பின்னர் தெரியவந்ததுள்ளது

அந்த பயணப்பெட்டி குறித்து 23 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கானை தொடர்புகொண்டு கேட்ட போது, இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், கருத்துரைக்க மறுத்து விட்டார். காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு