Apr 2, 2026
Thisaigal NewsYouTube
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்கச் செய்வது அவசியம்- கோபிந்த் சிங் டியோ கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்கச் செய்வது அவசியம்- கோபிந்த் சிங் டியோ கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.17-

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை எப்போதும் வலுவுடன் வைத்திருப்பது மிக முக்கியமாகும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.

இன்று இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் கோபிந்த் சிங் உரையாற்றினார். இலக்கவியல் அமைச்சில் மலாய், சீனர் இந்தியர்கள் உட்பட கிழக்கு மலேசியாவிலுள்ள பிற இனத்தவர்களும் பணிபுரிவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தமது அமைச்சில் அனைத்து இன அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து சேவையாற்றும் இத்தகைய கலாச்சாரம் தொடரப்பட வேண்டும் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

மலேசியர்களாகிய நாம் அனைவரின் நம்பிக்கையை மதித்து ஒற்றுமையாக வாழ வேண்டியது அவசியம். அதற்குச் சான்றாக இன்றைய நோன்பு துறப்பு நிகழ்ச்சி திகழ்வதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

Related News