Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தாமான் கங்கோங் இண்டா அருகாமையில் வீடமைப்புத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு !
தற்போதைய செய்திகள்

தாமான் கங்கோங் இண்டா அருகாமையில் வீடமைப்புத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு !

Share:

கூலிம், பாயா பெசார் வட்டாரத்தில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியான தாமான் கங்கோங் இண்டா பகுதியின் அருகாமையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 30 குடியிருப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் .

அந்த வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் பாயும் சுங்கை செலுவாங் ஆற்றின் நடுவே தடுப்பு சுவர் போன்று ஆறு நெடுகிலும் தடுப்பு கற்கள் இறக்கப்பட்டதால், ஆற்றின் அகலம் குறைந்துள்ளது. இதன் மூலம் கனத்த மழையின் போது, ஆற்று நீர் கரைப்புரண்டோடி, போதுமான அகலமின்றி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து தாமான் கங்கோங் இண்டா குடியிருப்புப் பகுதியை வெள்ளக்காடாக மாற்றும் சாத்தியம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை சிறிது நேரமே பெய்த கனத்த மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால், ஆறு அகலமாக இருந்ததால், நீர் பெருக்கெடுத்து குடியிருப்புப் பகுதியில் நுழையவில்லை. தற்போது ஆறு சுருக்கப்பட்டதால் அத்தகைய ஓர் அபயாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று குடியிருப்பாளர் சுதா சண்முகயா தெரிவித்தார்.

ஆற்றின் அகலம் சுருக்கப்படும் இத்திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் வெள்ள அபாயம் மூன்று மடங்காக அதிகரிக்க சாத்தியம் இருப்பதாக Sutha அச்சம் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு