Jul 5, 2026
Thisaigal NewsYouTube
25 விழுக்காடு வரி விவகாரம்: அமெரிக்காவுடன் மலேசியாவின் பேச்சுவார்த்தை தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

25 விழுக்காடு வரி விவகாரம்: அமெரிக்காவுடன் மலேசியாவின் பேச்சுவார்த்தை தொடர்கிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை.09-

வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமெரிக்காவிற்கு மலேசியா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாளை வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ருபியோவைச் சந்தித்துத் தாம் பேசவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அண்மையில் அமெரிக்காவிற்குத் தூதுக் குழுவை அனுப்பிய மலேசியா, அமெரிக்கா, ஒரு தலைபட்சமாக விதிக்கக்கூடிய இந்த வரி விதிப்பினால் மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தின் வர்த்தகத்திலும் எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்கும் என்பது தெளிவுப்படுத்தப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் 25 விழுக்காடு வரி விதிப்பில் அமெரிக்கா உறுதியாக இருந்தாலும், பேச்சு வார்த்தைகளுக்கான கதவுகள் மூடப்படவில்லை. நாளை நடைபெறும் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் விவகாரம் குறித்து தாம் விவாதிக்கவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது