ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.26-
எதிர்வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியுதவி வரும் மார்ச் 16 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் 'பினாங்கு 2030' இலக்கை நோக்கிய பயணத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.








