Jun 30, 2026
Thisaigal NewsYouTube
தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

Share:

புலாவ் தெங்கோல் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமானதாக நம்பப்படும் முக்குளிப்பாளர் ஒருவரைத் தேடும் நடவடிக்கையானது 94.93 சதுர கடல் மைல்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

66 வயதான டாம் பெங் ஹூங் என்பவரை கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் பல முகமைகளும், தனியார் தரப்புகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA தெரிவித்துள்ளது.

மேற்பரப்பு தேடுதல் பணிகள் பகாங் மாநில MMEA-வின் ‘பாட் பெர்காசா 45’ கப்பலின் உதவியுடனும், திரெங்கானு மாநில MMEA-வின் ‘கே.எம் ரெடாங்’ கப்பலின் உதவியுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தீவில் செயல்பட்டு வரும் மூன்று முக்குளிப்போர் மையங்கள், சம்பவம் நடந்த பகுதியில், நீருக்கடியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக MMEA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு