Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

Share:

புலாவ் தெங்கோல் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமானதாக நம்பப்படும் முக்குளிப்பாளர் ஒருவரைத் தேடும் நடவடிக்கையானது 94.93 சதுர கடல் மைல்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

66 வயதான டாம் பெங் ஹூங் என்பவரை கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் பல முகமைகளும், தனியார் தரப்புகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA தெரிவித்துள்ளது.

மேற்பரப்பு தேடுதல் பணிகள் பகாங் மாநில MMEA-வின் ‘பாட் பெர்காசா 45’ கப்பலின் உதவியுடனும், திரெங்கானு மாநில MMEA-வின் ‘கே.எம் ரெடாங்’ கப்பலின் உதவியுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தீவில் செயல்பட்டு வரும் மூன்று முக்குளிப்போர் மையங்கள், சம்பவம் நடந்த பகுதியில், நீருக்கடியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக MMEA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை