May 28, 2026
Thisaigal NewsYouTube
இனங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒன்றுமை மேலோங்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

இனங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒன்றுமை மேலோங்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.14-

இன்று இனிய சித்திரைப் புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு புத்தாண்டு ஆகியவற்றைக் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பினைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் நாம் பன்முகத்தன்மைக் கலாச்சாரத்தை பெருமையுடன் அனுசரிக்கிறோம். இது நமது நாட்டின் தனித்துவத்தையும், வலிமையையும் காட்டுகிறது. இந்த உணர்வு தொடரப்பட வேண்டும், பலம் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்திற்கான வணிக நிதியுதவி உட்பட இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். அதே போல் கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என்று பிரதமர் உறுதி கூறினார்.

இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரின் எதிர்காலத் தேவைக்கு இவை மிக முக்கியமானவை என்பதால் இவற்றில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்