Jun 27, 2026
Thisaigal NewsYouTube
எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்
தற்போதைய செய்திகள்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்

Share:

ஜோஹர் மாநிலத் தேர்தலில் எண்டாவ் சட்டமன்றத் தொகுதியை தக்கவைத்துக் கொள்ளப் போட்டியிட வேண்டாம் என்ற பெர்சத்து கட்சியின் முடிவு, அங்குள்ள வெற்றி வாய்ப்புகளையும் கட்சியின் பலத்தையும் மறுபரிசீலனை செய்த பின்னரே எடுக்கப்பட்டது என்று அக்கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகிச் சென்றதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும், அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு மற்றும் வாக்காளர்களின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

முன்னதாக, பெர்சத்து கட்சியிலிருந்து விலகி மீண்டும் அம்னோ இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அல்வியா தாலிப், இம்முறை பாரிசான் நேஷனல் வேட்பாளராக எண்டாவ் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

மேலும், தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்ற நிலை ஏற்பட்டால், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஆலோசிக்கப்படும் என்றும், முன்கூட்டியே எந்தக் கணிப்பையும் கூற விரும்பவில்லை என்றும் முஹ்யித்தீன் யாசின் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்