Jun 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

Share:

போலீஸ் காரின் மீது செங்கல்லை வீசி சேதப்படுத்திய வீடற்ற வெளிநாட்டு நபர் ஒருவரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் போலீஸ் வாகனத்தின் மீது செங்கல்லை வீசியுள்ளார். கோலாலம்பூர் - ஜாலான் ஹாங் லெகியு நடந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த நபரைப் கையும்களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முதற்கட்ட நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு, தற்போது மேலும் 14 நாட்களுக்கு தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்