நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இத்தகவலை அக்கூட்டணியின் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்துள்ளார்.
கோலா பிலாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்வு ஒன்றில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி ம் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய மந்திரி பெசாரும், சிகாமாட் தொகுதியின் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினருமான அமினுடின் ஹருண், தாம் இம்முறை எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டார். வரும் ஜூலை 14 வரை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
இந்தத் தேர்தலில், நெகிரி செம்பிலானின் மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி போட்டியிடுகிறது. இதில் பிகேஆர் 16 இடங்களிலும், ஜசெக 11 இடங்களிலும், அமானா 9 இடங்களிலும் களம் இறங்குகின்றன. இவர்களின் கூட்டாட்சி நற்புறவுக் கூட்டணியான பாரிசான் நேஷனலும் அனைத்து 36 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 28-ஆம் தேதியும், இறுதி வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.








