அரசியல் தலைவர்கள் இனம் மற்றும் மதம் சார்ந்த பிளவுபடுத்தும் விவாதங்களைக் கடந்து, நவீன பாதுகாப்பு சவால்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மாத கொண்டாட்டத்தில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்கள் அவசர கவனம் பெற வேண்டும் என்று எச்சரித்தார். "நாடாளுமன்றத்தில்கூட நாம் இன்னும் இனம், மதம் மற்றும் பிராந்திய உணர்வுகள் போன்ற பழைய பிரச்சினைகளையே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால் நாட்டை அச்சுறுத்தும் முக்கியப் பிரச்சினைகளுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை" என்று அவர் கவலை தெரிவித்தார்.
தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுக்கு எதிரான முதல் 'ஃபயர்வால்' குடும்பங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு மலேசியரின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், எல்லைப் பாதுகாப்பு, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன சவால்களை எதிர்கொள்ளத் தாய்லாந்துடன் மலேசியா கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.








