தெலிகோம் மலேசியா விற்கு சொந்தமான கேபல் கம்பிகளை களவாடியதாக நம்பப்படும் இரு பெண்கள் உட்பட ஐவரை போலீசார் கைது செய்தனர்.
மலாக்கா, ஜாசின், சுங்ஙை ரம்பையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து 19 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐவரும் ஜாசின், மூவார், தங்காக் ஆகிய மாவட்டங்களில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சத்தோ சைனோல் சமா தெரிவித்தார்.
பிடிபட்ட ஐவரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.







