புத்ராஜெயா, ஜூலை 05-
பயணிகளின் எண்ணிக்கை இலக்கை நிறைவு செய்ய தவறியிருக்கும் MRT 1 மற்றும் MRT 2 ஆகிய ரயில் சேவைகளின் பலவீனம் களையப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.
குறிப்பாக, பயணிகள் அதிகமான பயணம் செய்யும் உச்ச நேரத்தில் அவர்களின் தேவைகளை அறிந்து, உரிய வசதிகளை ஏற்படுத்தி தருவதில் முழு கவனம் செலுத்தப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இவ்விரு ரயில் சேவைகளின் பலவீனங்கள் களையப்படுவதற்கு அவ்வப்போது தாமே நேரடி கவனம் செலுத்தி வருவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் இதனை தெரிவித்தார்.








