குடியுரிமை சான்றிதழ் இல்லாததால் படிப்பை தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்கி வரும் மாணவியின் குடும்பத்தை கல்வி அமைச்சு சந்தித்துள்ளது.
கல்வித்துறை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி நெகிரி செம்பிலானில் சம்பந்தப்பட்ட மாணவி பள்ளிப்படிப்பை தொடர ஒரு தீர்வை கண்டறிவதற்கு சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டதாக இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தனர்.
குடியுரிமை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அம்மாணவியின் பெற்றோர்கள் திருமணத்தை பதிவு செய்யத் தவறியதால் அச்சிறுமிக்கு குடியுரிமை சான்றிதழ் கிடைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டதாகவும் வருகின்ற மார்ச் மாதம் நான்காம் ஆண்டு தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.








