கிள்ளான், பாவால் - கம்போங் சுஙை ஊடாங் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 வாகனங்கள் சேதமுற்றன.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.03 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, ஒரு தீயணைப்பு வண்டியுடன் அவ்விடத்திற்கு விரைந்த 20 வீரர்கள், மூழு வீச்சில் தீயைக் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையில் துணை இயக்குநர் முஹமட் எஹ்சான் முஹமட் ஸேன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஒரு பெரோடுவா மைவி காரும், 6 மோட்டார் சைக்கிள்களும் நாசமடைந்த வேளையில், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்று அவர் குறிப்பிட்டார். இவ்விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


