கிள்ளான், பாவால் - கம்போங் சுஙை ஊடாங் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 வாகனங்கள் சேதமுற்றன.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.03 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, ஒரு தீயணைப்பு வண்டியுடன் அவ்விடத்திற்கு விரைந்த 20 வீரர்கள், மூழு வீச்சில் தீயைக் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையில் துணை இயக்குநர் முஹமட் எஹ்சான் முஹமட் ஸேன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஒரு பெரோடுவா மைவி காரும், 6 மோட்டார் சைக்கிள்களும் நாசமடைந்த வேளையில், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்று அவர் குறிப்பிட்டார். இவ்விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


