கிள்ளான், பாவால் - கம்போங் சுஙை ஊடாங் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 வாகனங்கள் சேதமுற்றன.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.03 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, ஒரு தீயணைப்பு வண்டியுடன் அவ்விடத்திற்கு விரைந்த 20 வீரர்கள், மூழு வீச்சில் தீயைக் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையில் துணை இயக்குநர் முஹமட் எஹ்சான் முஹமட் ஸேன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஒரு பெரோடுவா மைவி காரும், 6 மோட்டார் சைக்கிள்களும் நாசமடைந்த வேளையில், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்று அவர் குறிப்பிட்டார். இவ்விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


