Jun 6, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: விசாரணை அறிக்கை புத்ராஜெயாவில் சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம்: விசாரணை அறிக்கை புத்ராஜெயாவில் சமர்ப்பிப்பு

Share:

புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிலாங்கூர் அரசாங்கம் கடந்த மாதம் புத்ராஜெயாவிடம் சமர்ப்பித்துள்ளது.

சுயாதீன விசாரணைக் குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் வழங்கியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையானது தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், அவர்களிடமிருந்து கருத்து கிடைத்தவுடன் பொதுமக்களுக்கும் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 308 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,254 பேர் பாதிக்கப்பட்டனர்.

மேலும், 87 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததுடன், 148 வீடுகளுக்கு பழுதுபார்க்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு