Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்

Share:

குளுவாங், ஜூலை.07-

கடமையில் இருந்த பாதுகாவலரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியப் பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்ததாக நம்பப்படும் 27 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 3 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் குளுவாங், ஜாலான் பங்குங்கில் ஒரு கட்டடத்தின் பின்னால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய பாதுகாவலர் போலீசில் புகார் செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

அந்த பாதுகாவலர் மரக்கட்டை மற்றும் இரும்பினால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கடந்த சனிக்கிழமை ஜாலான் ஜெலுத்தோங்கில் அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழி ஏற்கனவே மூன்று குற்றப்பதிவுகளைக் கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார் | Thisaigal News