Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்

Share:

குளுவாங், ஜூலை.07-

கடமையில் இருந்த பாதுகாவலரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியப் பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்ததாக நம்பப்படும் 27 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 3 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் குளுவாங், ஜாலான் பங்குங்கில் ஒரு கட்டடத்தின் பின்னால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய பாதுகாவலர் போலீசில் புகார் செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

அந்த பாதுகாவலர் மரக்கட்டை மற்றும் இரும்பினால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கடந்த சனிக்கிழமை ஜாலான் ஜெலுத்தோங்கில் அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழி ஏற்கனவே மூன்று குற்றப்பதிவுகளைக் கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News