வீடமைப்புப்பகுதி ஒன்றில் தமது காதலியைப் பார்ப்பதற்கு அந்த வீடமைப்பப்பகுதியின் பாதுகாவலர் அனுமதிக்காததால் தம்மை போலீஸ்காரர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, துப்பாக்கியை காட்டிய 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் காஜாங், பண்டார் சுங்கை லோங் என்ற இடத்தில் உள்ள வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது.
சம்ந்தப்பட்ட நபர் துப்பாக்கியை காட்டியதால் பயந்து போன அந்த பாதுகாவலர், அந்த நபரை வீடைப்புப்பகுதியில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து அந்த பாதுகாவலர் பின்னர போலீஸில் புகார் செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷட் ஹஸ்சான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை தேடிக் கண்டு பிடித்த போலீசார் அந்த நபர் போலீஸ்கார் அல்ல என்றும் பாதுகாவலர் நிறுவனம் ஒன்றில் வேலை செயகிறார் எஎன்பதும் தெரியவந்தது.
அந்த நபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் ஷட் ஹஸ்சான் குறிப்பிட்டார். அந்நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


