Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியாவில் இருட்டறையில் அடைப்பு, நிர்வாண சித்திரவதைகளை அனுபவித்த 24 வயது மலேசியர் பத்திரமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கம்போடியாவில் இருட்டறையில் அடைப்பு, நிர்வாண சித்திரவதைகளை அனுபவித்த 24 வயது மலேசியர் பத்திரமாக மீட்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

கம்போடியாவில் மனிதக் கடத்தல் கும்பலால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட, 24 வயதான மலேசியர் ஒருவரை, மலேசிய பன்னாட்டு மனிதநேய அமைப்பான MHO பத்திரமாக மீட்டுள்ளது.

நேற்று கம்போடியாவில் இருந்து விமானத்தின் மூலம் அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சூதாட்ட மையம் ஒன்றில் மாதம் 4,132 ரிங்கிட் வருமானத்துடன் கூடிய வேலை என்று ஏஜெண்ட் ஒருவர் சொன்ன வாக்குறுதியை நம்பிச் சென்ற அவர், அங்கு மோசடி வேலைகளைச் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளார்.

ராவ் என்ற முன்னாள் லாரி ஓட்டுநரான அவர், மோசடி வேலைகளைச் செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து, அக்கும்பல் அவரை மிகுந்த சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளது.

நிர்வாண நிலையில் தலைகீழாக தொங்கவிடுவது, இருட்டறையில் அடைப்பது போன்ற சித்ரவதைகளைத் தாம் அனுபவித்ததாக நேற்று செய்தியாளர்களிடம் ராவ் தெரிவித்தார்.

மேலும், தன்னை விடுவிக்க 30,000 ரிங்கிட் பிணைத் தொகை கேட்டு மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ள மேலும் 4 மலேசியர்களை மீட்கும் முயற்சியில் MHO ஈடுபட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு