லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்சப்பணம் என்று நம்பப்படும் பெரும் தொகையை மீட்பத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஆணையத்தின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் சிவகுமாரிடம் கடந்த திங்கட்கிழமை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் இரண்டாவது முறையாக விசாரணை செய்துள்ளனர். லஞ்சப் பணம் மீட்கப்படவில்லை. அந்தப் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பணத்தைத் தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் எஸ்.பி.ஆர்.எம். முனைப்பு காட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதனிடைய இந்த லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணையில் எந்தவொரு ஆருடத்தையும் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு எஸ்.பி.ஆர்.எம்.தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


