லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்சப்பணம் என்று நம்பப்படும் பெரும் தொகையை மீட்பத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஆணையத்தின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் சிவகுமாரிடம் கடந்த திங்கட்கிழமை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் இரண்டாவது முறையாக விசாரணை செய்துள்ளனர். லஞ்சப் பணம் மீட்கப்படவில்லை. அந்தப் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பணத்தைத் தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் எஸ்.பி.ஆர்.எம். முனைப்பு காட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதனிடைய இந்த லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணையில் எந்தவொரு ஆருடத்தையும் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு எஸ்.பி.ஆர்.எம்.தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


