குளுவாங், ஜூலை.11-
தனது 17 வயது உறவுக்காரப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் தொலைத்தொடர்பு நிறுவனப் பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஜோகூர், குளுவாங், தாமான் மாத்தாஹாரி என்ற வீடமைப்புப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 37 வயது நபர், நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டப் பெண், கடந்த சனிக்கிழமை போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்தச் சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








