May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் காரிலேயே சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் காரிலேயே சுடப்பட்டார்

Share:

கிள்ளான், புக்கிட் திங்கியில் கார் நிறுத்தும் இடத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காரில் இறந்து கிடந்தது இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.

கறுப்பு நிற கார் ஒன்றில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்ட பொது மக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் அந்த நபர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர். இது தொடர்பான வீடியோ காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சுட்டக்கொல்லப்பட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

Related News