Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை நியமன செயல்முறையை அனைவரும் மதிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை நியமன செயல்முறையை அனைவரும் மதிக்க வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஜூலை.11-

கூட்டரசு அரசியலமைப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சட்டத்துறை நியமனச் செயல்முறையை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதித்துறையைப் பாதுகாக்கும் பொருட்டு வரும் திங்கட்கிழமை மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் நடத்தவிக்கும் பேரணி தொடர்பில் பிரதமர் கருத்துரைத்தார்.

மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சட்டத்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பேரணியைத் தாம் நிறுத்தச் சொல்லவில்லை. மாறாக, அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும், மதிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்தித்த போது பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.

சட்டத்துறையைப் பாதுகாக்கும் பொருட்டு திங்கிட்கிழமை மிகப் பெரியப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது