May 2, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் OPS SAPU சோதனை : அந்நியத் தொழிலாளர்களைப் பிடிக்க முயன்றபோது அதிகாரி காயம்
தற்போதைய செய்திகள்

கூலிமில் OPS SAPU சோதனை : அந்நியத் தொழிலாளர்களைப் பிடிக்க முயன்றபோது அதிகாரி காயம்

Share:

கெடா மாநில குடிநுழைவுத் துறை நேற்று காலை கூலிம், பாடாங் மேஹாவில் உள்ள கட்டிட நிர்மாணத் தளத்தில் நடத்திய 'ஒப்ஸ் சாப்பு' அதிரடி சோதனையில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

சுமார் 155 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, அதிகாரிகளைக் கண்ட அந்நிய நாட்டினர்கள் தப்பியோடி கட்டிடக் கூரைகளிலும் இயந்திரங்களுக்கு இடையிலும் பதுங்கினர். அவர்களைத் துரத்திப் பிடிக்க முயன்றபோது, குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.

காயமடைந்த அதிகாரி உடனடியாக கூலிம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

25 அதிகாரிகள் பங்கேற்ற இந்தச் சோதனையில், அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி