May 15, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம்: பள்ளிகளே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பகடிவதைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம்: பள்ளிகளே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களைப் பள்ளிகள் மறைக்கக்கூடாது. அவ்வாறு மறைத்தால், பள்ளிகளே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் மற்றும் கல்விக் கழகங்களில் நிகழும் எந்தவொரு பகடிவதைச் சம்பவத்தையும் அது சிறிதாக இருந்தாலும் கூட, அதனைப் பாதுகாக்க வேண்டாம் என்று பள்ளிகளுக்கு, குறிப்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பகடிவதை பாதுகாக்கப்படுவதும், மறைப்பதும் ஒரு வகையான குற்றமாகக் கருதப்படலாம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பகடிவதைச் சம்பவங்களுக்கான காரணங்களில் தவறான புரிதல்கள் அல்லது மாணவர் பாதுகாப்பதை விட பள்ளியின் தோற்றத்தைப் பேணுவதற்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவை அடங்கும்.

இவ்விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். சில நேரங்களில் மாணவர்களைப் பாதுகாப்பதை விட பள்ளி பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தகையச் சம்பவங்களை மறைப்பது உண்டு என்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.

இன்று புத்ராஜெயா, பிரசிண்ட் 5, செருலிங் அரசு பணியாளர்களுக்கான வீடமைப்புப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்தப் பின்னர் செய்தியார்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு