Mar 24, 2026
Thisaigal NewsYouTube
உள்ளூர் மீன்பிடிப் படகின் பணியாளர் ஒருவர் கடலில் குதித்ததில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது
தற்போதைய செய்திகள்

உள்ளூர் மீன்பிடிப் படகின் பணியாளர் ஒருவர் கடலில் குதித்ததில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது

Share:

கோல கெடா, ஜூலை 10-

கோல கெடா அருகே நேற்று மாலை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ரோந்துக் குழுவிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக, உள்ளூர் மீன்பிடிப் படகின் பணியாளர் ஒருவர் கடலில் குதித்ததில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது.

நேற்று இரவு 9:50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக, கோலா கெடா கடல்சார் மண்டல இயக்குநர் கமாண்டர் நூர் அஸ்ரேயாண்டி இஷாக் கூறினார்.

கோலா கெடா கடற்பரப்பில் இருந்து 4.1 கடல் மைல் தொலைவில் ரோந்துக் குழு படகைப் பிடித்தபோது, திடீரெனப் பணியாளர்களில் ஒருவர் தண்ணீரில் குதித்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, குடிமைத் தற்காப்புப் படை மற்றும் பல உள்ளூர் மீன்பிடி படகுகளின் உதவியுடன் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

Related News