Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 28 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திற்குச் சிறப்பு விடுமுறை
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் 28 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திற்குச் சிறப்பு விடுமுறை

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.25-

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திங்கட்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜோகூர் மந்திரி டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஃஸி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜேடிடி எனப்படும் ஜோகூர் டாருல் தாக்ஸிம் கால்பந்து குழுவினர் வெளிப்படுத்தி வரும் சிறப்பான ஆட்டத்தின் அடைவு நிலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜோகூர் மாநில மக்களுக்கு இந்தச் சிறப்பு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஓன் ஹாபிஃஸ் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டு மலேசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றள்ள ஜேடிடி அணியினர், நாளை ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை ஸ்ரீ பகாங் அணியுடன் மோதுகின்றனர்.

இதனையொட்டி, ஜோகூர் மாநிலத்திற்கு வரும் திங்கட்கிழமை சிறப்பு விடுமுறையை வழங்குவதற்கு இடைக்கால ஜோகூர் சுல்தான், துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் முடிவு செய்துள்ளதாக டத்தோ ஓன் ஹாபிஃஸ் தெரிவித்தார்.

Related News

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

ஏப்ரல் 28 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திற்குச் சிறப்பு விடுமுறை | Thisaigal News