மலேசியாவில் கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களை விநியோகிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 57 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 65 வழக்குகளுக்கு இது மிக நெருக்கமான எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆறு மாதங்களில் இந்த வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1,545 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், 13,957 லிட்டருக்கும் அதிகமான திரவ போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களை நேரடி தொடர்பின்றி அனுப்புவது கடத்தல் கும்பல்களின் வழக்கமான முறைகளில் ஒன்றாக மாறி வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








