Jan 23, 2026
Thisaigal NewsYouTube
4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.23-

முன்னாள் ஆயுதப்படைத் தளபதி டான் ஶ்ரீ முஹமட் நிஸாம் ஜாஃபார் மீது, 4.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி ரோஸ்லி அஹ்மாட் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தாம் குற்றமற்றவர் என்று முஹமட் நிஸாம் வாதிட்டார்.

முஹமட் நிஸாம் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆயுதப்படை நல நிதி தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக, MACC சட்டம் 2009, பிரிவு 23-இன் கீழ், இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதே வேளையில், குற்றவியல் சட்டம், பிரிவு 409-இன் கீழ், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டும், பிரிவு 165-இன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

இராணுவக் கொள்முதல் ஊழல் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை, இரண்டு உயர் அதிகாரிகள், 4 ஆயுதப்படை வீரர்கள் உட்பட 23 பேரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் நலநிதி மற்றும் தற்காப்பு அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது