மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை நிந்தித்ததாக கூறப்படும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 31 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சனூசிக்கு எதிராக கடந்த புதன்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் சனூசியிடம் இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் தெரிவித்தார்.
இன்று காலை 11 மணி வரையில் சனூசிக்கு எதிராக 31 போலீஸ் புகார்கள் பதிவாகியிருப்பதாக குறிப்பிட்ட ஐஜிபி புக்கிட் அமான் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விசாரணையை கையாண்டு வருவதாக கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


