May 26, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ அனந்தகிருஷ்ணனின் நல்லுடக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ அனந்தகிருஷ்ணனின் நல்லுடக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு தொடங்கியது

Share:

கோலாலம்பூர், டிச.3-


சுவிட்ஸ்சர்லாந்தில் காலமான மலேசியாவின் பிரபல தொழில் அதிபரும், கோடீஸ்வருமான டான்ஸ்ரீ டி. ஆனந்தகிருஷ்ணனின் நல்லுடக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாவில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக, டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நல்லடலை தாங்கிய பொன்னிறத்திலான பிரேதப் பெட்டி, பிரத்தியேக வாகனத்தில் அவரின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் முதலில் அனுமதிக்கப்பட்டனர் பின்னர் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல் சுவிட்ஸ்சர்லாந்திலிருந்து இன்று காலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனந்த கிருஷ்ணன் உடலை கொண்டு வரும் போது அவரின் மூன்று பிள்ளைகளில் ஒரே மகனான புத்தபிக்கு வேன் அஜா சிரிபன்யோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் காணப்ப்டடார்.

கடந்த நவம்பர் 28 ஆம் தேதி ஆனந்த கிருஷ்ணன் தமது 89 வயதில் சுவிட்ஸ்சர்லாந்தில் ஆல்ப்ஸில் உள்ள பண்ணை வீட்டில் காலமானார். அவரின் நல்லுடல் நாளை புதன்கிழமை கோலாலம்பூல், லொக் யூ இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள், மலர்களோ, பூமாலைகளோ கொண்டு வர வேண்டாம் என்று குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு