Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் டோல் சாவடியை மோதியதில் ஒரு வயது குழந்தை பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் டோல் சாவடியை மோதியதில் ஒரு வயது குழந்தை பலி

Share:

காஜாங், செப்டம்பர்.27-

ஃபோர் வீல் டிரைவ் வாகனம் ஒன்று இழந்து டோல் சாவடியின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக மாண்டது. நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எட்டு பேர் காயமுற்றனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.55 மணியளவில் காஜாங், புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் தாங்கள் காலை 11 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஃபோர் வீல் டிரைவ் வாகனம், ஒரு கார், ஒரு ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வாகனம், ஒரு லோரி சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் டோல் சாவடியின் தடுப்புக் கல்லை மோதி விபத்துக்குள்ளான ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில் ஒரு வயது ஆண்டு குழந்தை மட்டும் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

காயமுற்ற எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து