Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாகனம் டோல் சாவடியை மோதியதில் ஒரு வயது குழந்தை பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் டோல் சாவடியை மோதியதில் ஒரு வயது குழந்தை பலி

Share:

காஜாங், செப்டம்பர்.27-

ஃபோர் வீல் டிரைவ் வாகனம் ஒன்று இழந்து டோல் சாவடியின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக மாண்டது. நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எட்டு பேர் காயமுற்றனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.55 மணியளவில் காஜாங், புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் தாங்கள் காலை 11 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஃபோர் வீல் டிரைவ் வாகனம், ஒரு கார், ஒரு ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வாகனம், ஒரு லோரி சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் டோல் சாவடியின் தடுப்புக் கல்லை மோதி விபத்துக்குள்ளான ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில் ஒரு வயது ஆண்டு குழந்தை மட்டும் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

காயமுற்ற எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்