கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுற்றுப்பயணிகளிடம் மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர் என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையென்றால், அது குறித்து அமைச்சர் உடனடியாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் புகார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை எஸ்பிஆர்எம்மிடம் கொண்டு செல்வது மூலமே அமைச்சர் தியோங் கிங் சிங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின் தன்மையை உறுதிசெய்ய முடியும் என்று தீபகற்ப மலேசிய குடிநுழைவுத்துறை தொழிற்சங்கத்தின் தலைவர் கலில் நிசா கைருடின் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவரை குடிநுழைவுத்துறை அதிகாரி தடுத்து நிறுத்திய போது, அமைச்சர் தியோங் கிங் சிங் அத்துமீறி நுழைந்து ரகளை புரிந்ததாக கூறப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


