May 6, 2026
Thisaigal NewsYouTube
 நெகிரி செம்பிலானில் கனமழையில் 35 பள்ளிகள் சேதம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் கனமழையில் 35 பள்ளிகள் சேதம்

Share:

சிரம்பான், நவம்பர்.29-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நேற்றிரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையினால் 35 பள்ளிகள் சேதமுற்றன. இந்த 35 பள்ளிகளும் இயங்கலை மூலம் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.

பள்ளிகளின் கூரைகள் கடுமையாகச் சேதமுற்ற நிலையில் 35 பள்ளிகளும் சீரமைக்கப்படும் வரை மாணவர்கள் வரும் திங்கட்கிழமை முதல் ஓன்லைன் மூலம் தங்கள் வீடுகளிலிருந்து கல்வி கற்பார்கள் என்று கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கன மழை காரணமாக தம்பின், ரெம்பாவ், சிரம்பான் மற்றும் போர்ட்டிக்சன் வட்டாரத்தில் உள்ள 35 பள்ளிகள் கடுமையாகச் சேதமுற்றதாக அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. சேதம் குறித்து தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்