Jun 6, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் சிறிய ரக விமானம் அவசர தரையிறக்கம்: இருவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

லங்காவியில் சிறிய ரக விமானம் அவசர தரையிறக்கம்: இருவர் உயிர் தப்பினர்

Share:

லங்காவி, குவா பகுதியில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த 'டயமண்ட் டி.ஏ-40' என்ற சிறிய ரக விமானம் இன்று காலை அவசரமாக தரை இறங்கியதில், அதிலிருந்த இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.

விமானமோட்டும் பயிற்றுவிப்பாளர் முகமட் ஹஃபீஸ் இஸ்கந்தர் மற்றும் பெண் பயிற்சிப் பணியாளர் ஷா இசாத்தி மைசாரா ஆகிய இருவருமே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து காலை 9.54க்குப் புறப்பட்ட இந்த விமானம், 10.20 மணியளவில் எஞ்சின் கோளாறை எதிர்நோக்கியது.

இதையடுத்து, விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கப்பட்டு, காலை 10.27 மணிக்கு லங்காவி ஸ்டேடியத்தின் திறந்தவெளி மைதானத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தின் முன்பக்க சக்கரம் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணை வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்