May 26, 2026
Thisaigal NewsYouTube
7 மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்தது, 120,00 பேர் இடம் மற்றம்
தற்போதைய செய்திகள்

7 மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்தது, 120,00 பேர் இடம் மற்றம்

Share:

கோலாலம்பூர், நவ. 30-


ஏழு மாநிலங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணக்கை நேற்று இரவு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 505 பேராக இருந்தது ஏன்ற வெள்ளி பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

திரெங்கானு மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் பத்தாயிரம் பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இத்துடன் திரெங்கானு மாநிலத்தில் மொத்தம் 35 ஆயிரத்து 124 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிளந்தான் மாநிலத்திலும் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரத்தின்படி 80 ஆயிரத்து 640 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, பேரா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதாக அந்த மையம் அறிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு