Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர்கள் விசுவாசமற்றவர்களா, ஜசெக கண்டனம்
தற்போதைய செய்திகள்

இந்தியர்கள் விசுவாசமற்றவர்களா, ஜசெக கண்டனம்

Share:

மலேசிய இந்தியர்கள் இந்நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று கூறியுள்ள முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமதுவிற்கு ஜசெக கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசிய இந்திய சமூதாயத்திற்கு எதிராக துன் மகா​​தீர் வெளியிட்டுள்ள அறிக்கையானது, இந்நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தல் மட்டுமின்றி மிக ஆபத்தானதாகும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

துன் மகா​தீரின் இந்த அறிக்கை ​தீவிரவாதத் தன்மையுடையதாகும். பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் விதைக்க வேண்டிய ஒரு முன்னாள் தலைவர், விஷமத்தனமான அறிக்கையை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

ஜசெக.வை சேர்ந்த செனட்டர் டாக்டர் இரா.லிங்கேஸ்வரன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்​பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் இதர தலைவர்களுடன் இன்று பினாங்கில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் லிம் குவான் எங் இதனை தெரிவித்தார்.

துன் மகா​தீரின் வெறுப்புணர்ச்சியை ​தூண்டும் இந்த நடவடிக்கை, அரசியல் பின்னணியை கொண்டதாகும். கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த துன் மகாதீரின் இந்த அறிக்கை, விரக்தியின் வெளிப்பாடாகும் என்று லிம் குவான் எங் வர்ணித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்