Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி மாநிலத்தின் 100 ஆண்டுக் கால ஆலயங்களின் வரலாறு
தற்போதைய செய்திகள்

நெகிரி மாநிலத்தின் 100 ஆண்டுக் கால ஆலயங்களின் வரலாறு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலயங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசும், மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலமும் இணைந்து தயாரித்துள்ள இந்த வரலாற்று நூல், நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் லோபாக் சட்டமன்றத் தொகுதியில் டி.ஏ.பி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான சியு சே யோங் -கின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.

நெகிரி செம்பிலான் இந்து ஆலயங்களில் வரலாறுகள் அழிந்துவிடக்கூடாது, அவற்றின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும், ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவை உடைப்படுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும், அந்த ஆலயங்களின் வரலாற்றை மேம்பாட்டாளர்கள் புரிந்து கொண்டு அவற்றின் நிலத்தில் கை வைக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காக சியு சே யோங்-கின் தூர நோக்கு சிந்தனையின் அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருனின் ஒப்புதழைப் பெற்று இந்த நூலை அச்சிடுவதற்கான செலவினத்தை மாநில அரசே ஏற்று அதற்கான முன்னெடுப்புகளை எடுத்த பெருமை சியு சே யோங் - ங்கையே சேரும்.

மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாம் அல்லாதவர்கள் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தின் சியு சே யோங் இந்த பெரும் பணியை நிறை வேற்றி லோபாக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!