Jun 4, 2026
Thisaigal NewsYouTube
செமோர் ஆயுதக் கொள்ளை: சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள்தான் உள்ளனர் – போலீஸ்
தற்போதைய செய்திகள்

செமோர் ஆயுதக் கொள்ளை: சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள்தான் உள்ளனர் – போலீஸ்

Share:

ஈப்போ, ஜூன்.04-

ஈப்போ, செமோர், கிளேபாங் ரியா பகுதியில் கடந்த மே 31-ஆம் தேதி மளிகைக் கடையில் பாராங் கத்திகளுடன் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள்தான் இருப்பதாகப் பேரா மாநிலப் போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான காணொளி மற்றும் உளவுத்துறை தகவல்களைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அண்டை மாநிலப் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கும்பல் பினாங்கின் நிபோங் திபாலில் நடந்த மற்றொரு கொள்ளைச் சம்பவத்துடனும் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. ஆயுதக் கொள்ளை பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட 3 சந்தேக நபர்களையும் போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று நோர் ஹிசாம் தெரிவித்தார்.

Related News