கோலாலம்பூர், மார்ச்.08-
கோலாலம்பூர் சாலைச் சண்டியர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஜாலான் பஹாங், ஜாலான் கெந்திங் கிளாங், ஜாலான் செமாராக் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவற்படையினரும் சாலைப் போக்குவரத்துத் துறையும் இணைந்து நடத்திய சோதனையில் 2,000 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது விதிகளுக்குப் புறம்பாக மாற்றங்கள் செய்யப்பட்ட 80 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 797 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சட்டவிரோதப் பந்தயங்களைத் தடுக்க இத்தகைய கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து காவற்படையின் துணைத் தலைவர் சுஃபியான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.








