கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இ-ஹெய்லிங் வாகனங்கள் நுழைவதற்கான கட்டணம், இன்று செப்டம்பர் 16 -ஆம் தேதி முதல் 2 ரிங்கிட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணமானது வரி உட்பட, 1 மற்றும் 2 ஆகிய இரு முனையங்களிலும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேஎல்ஐஏ பயணிகள் அனுபவப் பிரிவின் மூத்த பொது மேலாளர் அப்துல் ஹஸ்மான் அப்துல் முஹிமின் கூறுகையில், முனையம் 1-ல் இதுவரை 3 ரிங்கிட்டும், முனையம் 2-ல் 2 ரிங்கிட்16 காசுகளும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு முனையங்களிலும் 2 ரிங்கிட் என கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் கட்டண ஒருமைப்படுத்தல் மூலம் பயணிகள் மற்றும் இ-ஹெய்லிங் சேவை இயக்குநர்களுக்கு தெளிவான, ஒரே மாதிரியான கட்டண நடைமுறை கிடைப்பதுடன், இரு முனையங்களிலும் பயணிகளை அழைத்துச் செல்லும் நடைமுறையும் மேலும் சீராகும் என மலேசியா ஏர்போட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.








