ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள் மத்தியில் இருந்து தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அதே சமயம், பொது மக்களில் இருந்தும் தேர்வு கண்காணிப்பாளர் நியமிக்கப்படும் விவகாரம் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டது. மேலும், பொதுத் தேர்வு நடைமுறைகளுக்கு பங்கம் விளைவிக்காத உறுதிப்பாட்டையும் அது கொடுக்க வல்லது என துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
தேர்வு நடக்கும்போது ஆடிரியர்களாக இருக்கும் அனுபவமிக்க தேர்வு கண்காணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்படும் தேர்வு கண்காணிப்பாளர்களால் வழிகாட்டப் படுவர் என அவர் மேலும் சொன்னார்.
இரகசியத் தன்மையை நிலைநாட்ட, அதிகாரப்பூர்வ இரகசியக் காப்புச் சட்டம் 1972 பாரத்தில் அவர்கள் கையொப்பமிடுவார்கள்.
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வுக்காக 137,000 தேர்வு கண்காணிப்பாளர்கள் தேவை என லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார். அந்த எண்ணிக்கையில் 20 விழுக்காடு கல்வியாளர்கள் அல்லாதோர் நியமிக்கப்பட இருப்பதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.








