லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் இரண்டு சிறப்பு அதிகாரிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் அந்தரங்க செயலாளர் மகேஸ்வரி மற்றும் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி சுகுமாரன் ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ள அந்த அதிகாரிகள் ஆவர்.
அவர்களுக்கு எதிராக பெறப்பட்டிருந்த 4 நாள் தடுப்பு காவல் இன்று முடிவடைந்ததாக எஸ்.பி.ஆர்.எம். கூறியது.
அவர்களுடன் சேர்ந்து கைதுசெய்யப்பட்ட ஈப்போவைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அது உறுதிப்படுத்தியது.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணைக்காக அந்த மூவரும் எஸ்.பி.ஆர்.எம். மினால் கைதுசெய்யப்பட்டனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


