லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் இரண்டு சிறப்பு அதிகாரிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் அந்தரங்க செயலாளர் மகேஸ்வரி மற்றும் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி சுகுமாரன் ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ள அந்த அதிகாரிகள் ஆவர்.
அவர்களுக்கு எதிராக பெறப்பட்டிருந்த 4 நாள் தடுப்பு காவல் இன்று முடிவடைந்ததாக எஸ்.பி.ஆர்.எம். கூறியது.
அவர்களுடன் சேர்ந்து கைதுசெய்யப்பட்ட ஈப்போவைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அது உறுதிப்படுத்தியது.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணைக்காக அந்த மூவரும் எஸ்.பி.ஆர்.எம். மினால் கைதுசெய்யப்பட்டனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


