Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்துடன் புதையுண்ட ஓட்டுநர்

Share:

ஜோகூர்,ஜுலை 19-

ஜோகூர்,பத்து பஹத், சிம்பாங் கானன்- கல்லுடைப்புப்பகுதியில் மண்வாரி இயந்திரத்தை செலுத்திக்கொண்டு இருந்த அதன் ஓட்டுநர், எதிர்பாராத விதமான நிகழ்ந்த மண் சரிவில் புதையுண்டார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.43 மணியளவில் நிகழ்ந்தது. இதில் உள்ளூவாசியான Eswandi Sapri என்ற 52 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதையுண்ட பகுதியில் அந்த மண்வாரி இயந்திரத்திலிருந்து அதன் ஓட்டுநரை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படையினர், போலீஸ் துறையினர் மற்றும் சுல்தானா நோரா மருத்துமனை உதவியாளர்கள் ஈடுபட்டதாக Batu Pahat இடைக்கால போலீஸ் தலைவர்ஷாருலானுார் முஷாத் அப்துல்லா தெரிவித்தார்.

Related News