May 28, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக முதல் கட்ட விசாரணை முடிவடைந்தது
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக முதல் கட்ட விசாரணை முடிவடைந்தது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.10-

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எதிரான முதல் கட்ட விசாரணை முடிவடைந்து விட்டதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று தெரிவித்துள்ளார்.

இனி, இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கவிருப்பதாக அஸாம் பாக்கி விளக்கினார். இந்த முறை, இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக அவரின் சொத்துக்கள் அறிவிப்பு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பொறுப்பேற்று இருந்த இஸ்மாயில் சப்ரி, தனது 14 மாத கால ஆட்சியில் அவர் அறிமுகப்படுத்திய மலேசிய குடும்பம் என்ற பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மடை மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்மாயில் சப்ரியின் 4 முன்னாள் அதிகாரிகள் பிடிபட்டது மூலம் ஒரு வீட்டில் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணமும், 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களையும் எஸ்பிஆர்எம் கைப்பற்றியுள்ளது. இதன் தொடர்பில் 5 நாட்களுக்கு இஸ்மாயில் சப்ரி 15 மணி நேரத்திற்கும் அதிகமாக எஸ்பிஆர்எம்மால் விசாரணை செய்யப்பட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்