May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது

Share:

ஷா ஆலம், பிப்.3

ஷா ஆலம், ஐ- சிட்டி, தாமான் தேமா நீர் விளையாட்டுப் பூங்காவில் சறுக்கு மிதவை கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்சிக்குழு கூட்டத்தில் முழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இது ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து முழு விளக்கத்தை அளிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியுள்ள பூர்வாங்க அறிக்கையைப் படித்து விட்டேன். தற்பேது முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என்று அமிருடின் தெரிவித்தார்.

செக்‌ஷன் 7 இல் உள்ள அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் பார்வையாளர்களில் ஒரு பெண் சொற்ப காயங்களக்கு ஆளாகினார்.

Related News