Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது

Share:

ஷா ஆலம், பிப்.3

ஷா ஆலம், ஐ- சிட்டி, தாமான் தேமா நீர் விளையாட்டுப் பூங்காவில் சறுக்கு மிதவை கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்சிக்குழு கூட்டத்தில் முழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இது ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து முழு விளக்கத்தை அளிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியுள்ள பூர்வாங்க அறிக்கையைப் படித்து விட்டேன். தற்பேது முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என்று அமிருடின் தெரிவித்தார்.

செக்‌ஷன் 7 இல் உள்ள அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் பார்வையாளர்களில் ஒரு பெண் சொற்ப காயங்களக்கு ஆளாகினார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்